InformationNeeds.com
Home/கட்டுரைகள்/நேரத்தையே மாற்றும் சக்தி கொண்ட கால தேவி அம்மன் - Goddess Kala Devi, who has the power to change time itself
Spirituality

நேரத்தையே மாற்றும் சக்தி கொண்ட கால தேவி அம்மன் - Goddess Kala Devi, who has the power to change time itself

July 25, 2025uma594 views

துரை - ராஜபாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ள எம்.சுப்புலாபுரம் என்ற ஊர் அருகில் சிலார்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கால தேவி நேர கோயில் அமைந்துள்ளது.

மனிதர்களுக்கு எப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. விஞ்ஞானிகளால் கூட காலத்தின் மர்மத்தையும், இந்தப் பூமியில் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் கணிக்க முடியாது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், நமது நேரத்தையும், நமது எதிர்காலத்தையும் அறிந்த ஒரு தெய்வம் இருந்தால், அது இந்த ஸ்ரீ காலதேவி அம்மன்தான்.

அறிவியலால் ஒருவரின் நேரத்தை கணிக்க முடியாது. இந்த கால தேவி அம்மன் கோயில் அந்த நேரத்திற்காக கட்டப்பட்டது. இந்த கால தேவி அம்மன் சிலையின் பின்புறம் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 நவக்கிரகங்களின் வடிவங்கள் ஒரு திருவாச்சியைப் போல அமைக்கப்பட்ட கல் அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலின் கோபுரத்தில் "நேரமே உலகம்" என்று எழுதப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் கால தேவிக்கு மட்டுமே சன்னதி உள்ளது. வேறு எந்த தெய்வத்திற்கும் சன்னதி இல்லை. கால தேவி அம்மன் ஒரு எண்கோண வடிவுடைய கருவறையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்களால் சூழும் வகையில் அமர்ந்திருக்கிறாள். இவை அனைத்தும் காலச் சக்கரத்தைக் குறிக்கின்றன, இவைகளுக்கு நடுவில் அபய வரதஹஸ்த முத்திரைகளுடன் ஒரு நட்சத்திர நாயகியாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள்

இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் இந்தக் கோயில் பகலில் திறந்திருக்காது. இரவு முழுவதும் திறந்திருக்கும். இந்தக் கோயிலில் உள்ள கால தேவி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று கூறப்படுகிறது. காலத்தின் அதிபதியான இந்தக் கால தேவி, ஒருவரின் கையெழுத்தை மாற்றும் சக்தி கொண்டவள். ஒருவரின் கெட்ட நேரத்தைக் கூட நல்ல நேரமாக மாற்றும் சக்தி இந்த கால தேவிக்கு உண்டு என்று புராணங்களில் கூறப்படுகிறது.

இந்தக் கோயிலுக்குச் செல்ல விரும்பினால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தான் இந்த அம்மனை வழிபட வேண்டும். இந்த கோயில் இரவு முழுவதும், சூரிய உதயத்திற்கு முன்பு வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில், இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

கெட்ட நேரத்தை மாற்றும் கால தேவி அம்மன்

இந்த கால தேவி அம்மன் இங்கு வரும் பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள கெட்ட நேரத்தை நீக்குகிறாள். இந்த கோவிலில் ஒரு அரிய கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் பக்தர்கள் 11 வினாடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்படி நிற்கும் போது, நமது கால சக்கரத்தில் கெட்ட நேரத்தை மாற்றி நல்ல நேரத்தைத் தருவாள் என்று நம்பப்படுகிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மாலை ஆறு மணி முதல் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. யாராவது தங்கள் வாழ்க்கையில் உள்ள கெட்ட நேரத்தை மாற்ற விரும்பினால், இந்த வழிபாட்டில் பங்கேற்று கால சக்கரத்தில் நின்று பிரார்த்தனை செய்யலாம்.

இந்தக் கோயிலுக்குச் சென்று இந்த அம்பாளைச் சுற்றி இடமிருந்து வலமாக 11 முறை வலம் வர வேண்டும். பின்னர் வலமிருந்து இடமாக 11 முறை வலம் வர வேண்டும். இரவில் இந்த அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அதன் பிறகு, அம்பாளுக்கு 11 நெய் தீபங்களை ஏற்றி, அம்பாளின் முன் அமர்ந்து, 11 நிமிடங்கள் கால தேவியின் முன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

கோவிலுக்கு செல்லும் வழி:

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் சென்று எம். சுப்புலாபுரம் மெயின் ரோட்டில் இறங்கிக் கொள்ளுங்கள். நடந்து சென்றோ அல்லது ஆட்டோ மூலமாகவோ கோயிலை அடையலாம். சாதாரண நாட்களை விட பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் செல்வது நல்லது. இரவு நேர கோயில் என்பதால், சாதாரண நாட்களில் போதுமான வசதிகள் இல்லை.

நேரத்தையே மாற்றும் சக்தி கொண்ட கால தேவி அம்மன் - Goddess Kala Devi, who has the power to change time itself | InformationNeeds